Kangara

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய சங்க கூட்டங்கள்

ஒரு பொறுப்பான நிறுவனமாக, நாங்கள் தயாரிப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், இயற்கை விவசாயத்தின் சிறந்த வாய்ப்புகள் பற்றிய உள்ளூர் விவசாயிகளின் அறிவை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறோம். எனவே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் சங்கங்களுடன் திறந்தவெளி மன்றங்களை ஏற்பாடு செய்தோம். இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு விவசாய உத்திகளை விவசாயிகளுக்கு வெளிப்படுத்துவதும், அவர்களின் தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு அரங்கை உருவாக்குவதும் இந்த உழவர் கூட்டத்தின் நோக்கமாகும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயி சந்திப்பை வெற்றிகரமாக நடத்த முடிந்தது. இப்பிரதேசத்தின் விவசாய அதிகாரிகள் மற்றும் அரசாங்க நிர்வாக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுபோன்ற ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்வதன் மூலம் விவசாயிகளின் தேவைகள் மற்றும் சவால்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும், இது அவர்களின் கவலைகளுக்கு தீர்வுகளை முன்வைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியது.

Supplier Registration